Wednesday, January 24, 2007

WHAT IS சிவபாலன்

(இப்பதிவு நகைச்சுவைக்காக மட்டும்....)



என்னுடைய நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அவருடை ஐந்து வயது மகன் வந்து DADDY, " WHAT IS சிவபாலன்!" என்றான்.


இப்ப ஏன் அதை கேட்கிறாய்? என்றார் எனது நண்பர்.

அதற்கு அவரது மகன், 'நீங்க அதை அடிக்கடி சொல்றீங்க..'

'அது என் நண்பர் பேரு' என்றான் எனது நண்பர்.

அவருடைய மகனுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. மீண்டும் அதையே கேட்டான்.

எனது நண்பர் சற்று நேரம் மவுனம்காத்தார்.

அதற்குள் அவரது மனைவி IT IS NAME OF A GOD! என்றார்.

அப்பொழுதும் அவருடைய மகனுக்கு ஏனோ அந்த பதிலில் உடன்பாடில்லாமல் மீன்டும்.. DADDY, " WHAT IS சிவபாலன்!" என்றான்.


அதற்கு நாத்திகரான எனது நண்பர்..

..
..
..
..


IT IS A FUNNY WORD! என்றார்.

(அறிவாளி சிவபாலனுக்கு அது முருகன் பேருன்னு தெரியாதா என்ன? இதெல்லாம் நகைச்சுவையா தான் எடுத்துக்குவார். அந்த அறிவாளி நண்பர் யாருன்னு கேக்கறீங்களா? கோக உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே. )

Thursday, January 18, 2007

தமிழ்மண நிர்வாகத்தின் சுறுசுறுப்பும் சோம்பலும்

தமிழ்மணத்தில் பல காலமாக வாசகனாக இருக்கும் நான் பிளாக்கர் ஆசையில் ஒரு பதிவு தொடங்கி எனக்கு பிடித்த மூன்று பாரதியார் கவிதைகளை முதல் மூன்று இடுகைகளாக இந்த பதிவில் போட்டிருந்தேன். தமிழ்மண பட்டையை பதிவில் சேர்த்துவிட்டு தமிழ்மணத்திலும் சேருவதற்கு விண்ணப்பித்தேன். மறுநாளே பதிவு தமிழ்மணத்தில் சேர்த்துகொள்ளப்பட்டது. ஆனால் எனக்கு தமிழ்மண பட்டை தெரியவில்லை. எல்லோருக்கும் உதவும் பொன்ஸக்காவிடம் கேட்டேன். அவர் என் பதிவை பார்ப்பதற்குள் இடுகைகள் தானாக தமிழ்மணத்தில் தெரிந்தது. அவரிடம் கேட்டால் அவரும் எதுவும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டார். எனக்கு இப்போதும் தமிழ்மண பட்டை தெரியவில்லை. அடுத்த பதிவு இட்ட போது அதில் தமிழ்மண பட்டை தெரிந்தது. தமிழ்மண பட்டை தெரியாத பதிவுகளை பின்னர் இட்டுக்கொள்ளலாம் என்று அவற்றை அழித்தேன். மறுநாளே ஆச்சரியமாக ஒரு தனிமடல் தமிழ்மண நிர்வாகிகளிடம் இருந்து வந்தது - என் பதிவு தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டதாக. மடலில் சொல்லியிருந்தது இது.
----------
Email on Jan 8th, 2007.

Dear ராஜசன்,
Your blog is Removed from listing by www.thamizmanam.com Administrator due to follwing reason,
good bye the one with one post. When I approved this blog on 24th December, 2006 it was NOT with a single post. Thank you for the understanding


நிர்வாகி
www.thamizmanam.com.
------------

எவ்வளவு சுறுசுறுப்பு பாருங்கள் தமிழ்மன நிவாகிகள்? முதல் மூன்று இடுகைகள் நீக்கிய 12 மணி நேரத்துக்குள்ளாகவே தமிழ்மணத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். அவர்களின் சுறுசுறுப்பை பாராட்டி தனிமடல் அனுப்பினேன். அப்போது திரும்பவும் மூன்று பதிவுகள் போட்டாயிற்று.

--------
Email on Jan 8th, 2007

அன்பின் தமிழ்மண நிர்வாகி,

நீங்கள் இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுப்பதை கண்டு மகிழ்ச்சி. என் பதிவில் இப்போது மூன்று இடுகைகள் இருக்கின்றன. மீண்டும் தமிழ்மணத்தில் என் பதிவை சேர்த்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
ராஜசன்.

-----------
தமிழ்மணத்திற்குச் சென்று மீண்டும் பதிவை சேர்த்து கொள்ள விண்ணப்பித்தேன். விண்ணப்பித்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. தமிழ்மணத்தில் சேர்த்து கொள்ளப்படவில்லை. தனிமடலில் கேட்டும் எந்த பதிலும் இல்லை. தமிழ்மணத்தாருக்கு வேலைப்பளு அதிகமாகிவிட்டதா இல்லை வேண்டுமென்றே என் பதிவு நிறுத்தப்பட்டிருக்கிறதா? அனுமதிக்காத காரணத்தை தமிழ்மணத்தார் சொன்னால் நன்றாக இருக்கும்.

------

Email on Jan 10th, 2007

மதிப்பிற்குரிய தமிழ்மணம் நிர்வாகிகளே.

என் பதிவை தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ள இரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்தேன். அது இன்னும் சேர்க்கை நிலவரம் பட்டியலில் இருக்கிறது. எனக்குப் பின் பட்டியலில் வந்த பதிவுகள் அனுமதிக்கப்பட்டுவிட்டன. அதனால் ஏதோ காரணத்தால் என் பதிவு தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ளப்படாமல் இருக்கிறது என்று தோன்றுகிறது. ஏதாவது கேள்விகள் இருந்தால் என்னிடம் கேளுங்கள். அல்லது ஏன் சேர்த்துக் கொள்ளபடவில்லை என்று தயவு செய்து தெரிவியுங்கள்.

அன்புடன்,
ராஜசன்

Tuesday, January 9, 2007

தலித் விடுதலை, பெண்ணியம், பார்பணீயம், பெரியார்!!

வலைப்பதிவர் நண்பர் ஓசை செல்லா 'தலித் விடுதலை, பெண்ணியம், பார்பணீயம், பெரியார்!! நாசமாகப் போக!' என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டிருக்கிறார். அவர் எந்த பதிவின் பின்னூட்டத்திற்காக இந்த பதிவை எழுதியிருக்கிறாரோ அந்த பதிவை படிக்கவில்லை இன்னும். இந்த பதிவில் சொல்லியிருக்கும் கருத்துக்கு மட்டுமே இந்த விமரிசனம்.

சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். வரலாற்று பார்வையுடன் இருக்கும் பலருக்கும் இவர் சொல்வதை ஒத்து கொள்ள முடியும். ஒருவர் மேல் அபரிமிதமான அன்பு இருந்தால் அவரின் செல்வாக்கு நிஜத்தில் எத்தனை தூரம் இருக்கிறதோ அதனை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக தோன்றும். அந்த தவறை இவரின் இந்த பதிவிலும் பார்க்க முடிகிறது. அவா ஆத்து பெண்கள் மடிசாரிலிருந்து சுடிதாருக்கு மாறியதற்கு பெரியாருக்கு அதிக பங்கு இருப்பதாக சொல்வது பூனை கண்ணை கட்டிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று சொல்வது போல் இருக்கிறது. போன நூற்றாண்டில் நிகழ்ந்த எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்களால் மடிசாரிலிருந்து சுடிதாருக்கு மாறினார்கள் அவா ஆத்து பெண்கள். உலகில் மாற்றங்களை முதலில் ஏற்று கொள்பவர்கள் அவா தான் என்பது செல்லாவுக்கும் தெரியும். ஆனால் அவருக்கு பெரியாரின் வீச்சை பற்றி பெருமையாக சொல்ல வேண்டும். அதனால் அப்படி சொல்கிறார். அவர் தன்னிடமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. அவா ஆத்து பெண்கள் மடிசாரிலிருந்து சுடிதாருக்கு மாற தூண்டிய பெரியாரின் கருத்துகள் ஏன் மற்ற சாதி பெண்களை கண்டாங்கி சேலை கட்டுவதில் இருந்து மாற்றவில்லை?

விதவை மறுமணமும் சகுனத்தை பார்ப்பதும் பெரியாரின் கருத்துகளின் வீச்சினால் மட்டுமே ஏற்பட்டது என்பதும் இதே வகையே. ராஜா ராம்மோகன் ராய் போன்ற அறிஞர்களின் முயற்சிகள் தான் இந்த மாற்றங்களை கொண்டு வந்தது என்பது வரலாற்று உண்மைகள்.

மற்றவர்களை கண்ணிருந்தும் குருடர்கள் என்று சொல்லிவிட்டு அவர்களை நாசமாக்க சபதம் மேற்கொள்ளும் நண்பர் தானும் அதே தவறை செய்வதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் அதே தவறு அவருக்கும் அவரை போன்றவர்களுக்கும் அதே நாசத்தை கொடுக்கும். இதுவும் சாபம் அல்ல.

Monday, January 8, 2007

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே

Anonymous இட்டிருக்கும் பதிவிற்க்கு பதில் இந்த பதிவு.

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் என்ற புலவர் தனது குறுந்தொகைப் பாடலில் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்.

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.

-பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.

எனக்கு இந்த குறுந்தொகைப் பாடலின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. தமிழ் அர்த்தம் தெரிந்த தமிழ் அறிஞர்கள் என் சந்தேகத்தினைத் தீர்க்க வேண்டுகிறேன்.

எனக்கு நண்பர் சொன்ன அர்த்தம்:-

பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே! சிவப்பான பூவை தலையில் அணிந்து மேலாடையை அகற்றி ஒரு கையில் தண்டையும், இன்னொரு கையில் கமண்டலத்தையும் பிடித்துக் கொண்டு உஞ்சவிருத்தி செய்து உழைக்காமல் உண்டி கொழுப்பவனே! கற்பு என்ற மிகச்சிறந்த வார்த்தையின் பொருளை படிக்காதவரும் உணர்ந்து அதன்வழி நடக்கும்போது நீ கண்டவரைப் புணர்ந்து காமத்தில் மயங்கி உயிர்வாழ்தல் தகுமோ?

எழுதியவர்: Anonymous at 12:37 AM

-------------------

Anonymousக்கு தமிழ் அறிஞர்கள் சொல்லும் அர்த்தம்:

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
சிவப்பு பூ உடைய முருங்கை மரக் கொம்பில் பூவையையும் இலையையும் களைந்து
அதனை கொம்பொடு/தண்டோடு பிடித்த சிறிய கமண்டலத்தை உடைய
சிறிய அளவான உணவு கொள்ளும் பார்ப்பன மகனே
சொல்ல முடியாத கற்பு உணர்வில் தோன்றும் இனிய சொல்லை மனத்தில் நினைத்து
பிரிந்தவரைச் சேர்த்து வைக்கும் உன் சிறந்த பண்பை விட பெரிய
மருந்தும் இருக்கிறதா? புரியாத புதிர் இது.

விடாது கருப்புவிற்கு வாழ்த்துக்கள்

நம் நண்பர் விடாது கருப்பு எழுதிய கட்டுரை நம் தன்மான சுயமரியாதை இயக்கத்தின் நாளிதழான 'விடுதலை'யில் வந்திருக்கும் செய்தியை நண்பர் தன் பதிவில் தெரிவித்திருக்கிறார். வலையுலகத்தில் பெரியாரின் கொள்கைகளை நேர்மையுடன் பரப்பி வரும் உண்மை விளம்பி நம் நண்பர் விடாது கருப்பு. அடாது அவர் மேல் பழிகள் விழுந்தாலும் விடாது பெரியாரின் பெயர் சொல்லி வருபவர் நம் நண்பர் விடாது கருப்பு. அவரது கட்டுரை 'விடுதலை' நாளிதழில் வருவது மிகவும் ஏற்புடையது. அவருக்கு என் வாழ்த்துகள்.

பஞ்ச திராவிட பிராமணர்கள்

வரலாற்றை மாற்றி எழுதத் துடிக்கும் திராவிட சிங்கங்களே. இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள். யாரோ ஒரு பார்ப்பான் ஆங்கில விக்கிபீடியாவில் பிராமணர்களும் திராவிடர்கள் என்று எழுதி வைத்திருக்கிறான். உடனே நீங்கள் இந்த விக்கிபீடியா குறிப்பை அழிக்க வேண்டும். இல்லையேல் இதனை ஒரு ஆதாரமாக வைத்துக் கொண்டு வஜ்ரா, கால்கரி சிவா, ஹரிஹரன், ஜடாயு, நீலகண்டன், குமரன், என்னார், எஸ்கே, விட்டுது சிகப்பு, சர்வேசன் போன்ற பார்ப்பனர்களும் பார்ப்பன அடிவருடிகளும் நம் வரலாற்றை தமிழ்மணத்திலும் மாற்றி எழுதிவிடுவார்கள். அது நடப்பதற்கு முன்னால் நீங்களே அவர்களை கிழி கிழி என்று கிழித்து, துவை துவை என்று துவைத்து காய போட்டுவிடுங்கள். திராவிட சிங்கங்களே உங்கள் இனத்தின் மானத்தை காப்பாற்றுங்கள். வாழ்க பெரியார். வாழ்க திராவிடம்.